நன்றி:விக்கிபீடியா
கொங்கு வேளாளர்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் (கொங்கு நாட்டுப்பகுதி) பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிளும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் தொழில் விவசாயம். கடும் உழைப்பாளிகளான இவர்கள் காடுகளை சீர் செய்து விவசாய நிலங்களாக்கினர். தற்போது விவசாயம் அல்லாமல் தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
சமுதாய அமைப்பு:
இவர்கள் பல குலங்களாக/ கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஓரே குலத்தை அல்லது கூட்டத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகள். இவர்களுக்குள் அதாவது பங்காளிகளுக்குள் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
திருமண முறை:
பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த அருமைக்காரர் (பிராமணர் அல்ல) என்பவர் திருமணத்தை நடத்துவார். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும்.கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
என்று அது தொடங்கும்.
திருமணம் 3 நாட்கள் நடக்கும். திருமணம் பெண் வீட்டில் நடக்கும். முதல் நாள் 'நாள் விருந்து'. - மாப்பிளைக்கும் பெண்ணுக்கும் அவரவர் உறவினர்கள் விருந்து செய்து போடுவார்கள். 2ம் நாள் - ' முகூர்த்த கால் அல்லது கல்யாணம் - இன்று முகூர்த்த கால் நட்டு எல்லா வித சடங்குகளையும் செய்வார்கள். 3ம் நாள் - முகூர்த்தம் ( தாலி கட்டு ) . அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment